Showing posts with label எமது கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label எமது கிறுக்கல்கள். Show all posts

Saturday, February 16, 2013

என்னவள் (எ) அவள். . !







ஓராயிரம் விண்மீன்கள் என்னைக் கண்டு வியந்தது
          ஒற்றை நிலவு நீ என்னுடன் பயணித்ததால்,
உமது விழி அம்புகளின் விவேகம் தான் என்ன
          விழிவழி நுழைந்து இதயத்தை துளைத்துவிட்டதே.
படபடத்த உனது இமைகளின் தாள லயங்களில்
          எந்தன் இதயத்துடிப்பும் நாட்டியம் ஆடுகின்றதே.
உன் இதழ்களைத் தீண்ட இயலாததால்
          உதட்டுச்சாயங்கள் கூட விரக்தி கொள்கின்றதே.
உன் கூந்தலேறியதால் மலர்கள் கூட
          மேன்மை கண்டதாய் கர்வம் கொள்கின்றதே
என்னே விந்தை, வியந்து விரிந்த நெற்றிப் பரப்பு
          என்னை நோக்க நாணம் கண்டனவே.
கைகோர்க்க கைநீட்டிய தருணம் உணர்ந்தேன்
           நீயும் நானும் நாமாகிவிட்டதாய்.

Wednesday, February 13, 2013

காதலர் தின வாழ்த்துக்கள். . . !

காதல் எனும் ஆற்று வெள்ளம் தன்னில் நீந்தித்திளைத்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும், நீந்தத்துடிக்கும் உள்ளங்களுக்கும், காதல் நீரில் கால் நனைக்காமல் மணம் கொண்டவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். . . !

  





*** புரிந்ததும் புரியாததும் ***


நான் யாரென்று நீ அறிந்தும்,
நீ யாரென்று யாமறியாத போதும்,
குறுந்தகவலில் அனுப்பிய ரோசா(ரோஜா)
சொல்லிற்று என் மீதான உம் காதலை. . . !

உந்தன் அழகு முகம் தன்னைக்
எம் கண்கள் காணாத போதும்,
படபடத்த எந்தன் இருதயம்
சொல்லிற்று உன் மீதான எம் காதலை. . . !

உன் மூச்சுக் காற்று நானென்கிறாய்
நான் வடிக்கும் கவிதை நீயென்கிறேன்
மண் சேர்ந்த விழித் துளிகள்
சொல்லிற்று காதல் மீதான நம் காதலை. . . !


பி.கு: சட்டென்று மனதில் உதித்த வரிகள் மறு ஆய்வு செய்யக்கூட தோன்றவில்லை 

Friday, August 6, 2010

சலனங்கள். . !


பிரிதலும் சேர்ந்திருத்தலும்
நிரந்தரமில்லை என்றுணர்ந்தபோதும்
பிரிதலில் சலனம்
கொள்கின்றோம்  நாம். . !

என்னே சூட்சமக்காரி நீ ?



உன் முகம் பார்த்திராத வரை
       பேசத் துடிக்கின்றேன்
உன் விழி பார்த்த தருணம்
      பேசாமல் ஊமை ஆகின்றேன்
உந்தன் காந்தப் பார்வைதன்னில்
      எம் குரல்வளை சிதறுகின்றதோ..!





மலர்களைக் கூடப் பறிக்க
     மனமில்லாதவள் நீ
என் மனதை மட்டும்
     பறித்துக் கொண்டாயே?

மௌன விரதம் என்கிறாய்
      விழிகளால்  பேசுகின்றாய்

என்னே சூட்சமக்காரியடி  நீ ?

Thursday, August 5, 2010

என் கல்லூரி வாழ்க்கை. . !


தனித்தனியாய் அழகழகாய்
     வெள்ளை வர்ண கட்டிடங்கள்


அழகுக்கழகு சேர்ப்பதற்காய்
    வேலி பின்னப்பட்ட பூங்காக்கள்

மனிதமனத்தை வருடுவதாய்
    ரீங்கார ஓசைபாடும் பறவைகள்

மாணவர்க்கு வழிகாட்டிகளாய்
    வழி அறிந்திராத ஆசிரியர்கள்

ஆசிரியரை சீர் பார்ப்பதற்காய்
    குழுமம் கண்ட நிர்வாகிகள்

இவற்றோடு எதார்த்தமாய்
    குழுமம் குழுமமாய் மாணவர்கள். . !


எதிர்நோக்குகின்ற இலட்சியங்கள்
    ஆர்ப்பரித்து வினாத்தொடுக்க

ஏமாற்றமடைந்த நினைவுகள்
    அழுகுரலில் சீண்டிப் பார்க்க

எதார்த்தமான புன்னகையோடு
     நண்பர்கள் கரம் கோர்க்க

கலக்கமாய் பயணித்தது 
     என் கல்லூரி வாழ்க்கை. . !

பேருந்து நிறுத்தம். . !

ஓர் அந்தி மழைக்காலம் !
மாநகரப் பேருந்தில்
சன்னலோரத்து இருக்கையில்
முன்னவர் சாளரத்தை தாழிட
விசாலமான சாரலில்
நனைந்து கொண்டிருந்தேன் நான். . .

பேருந்து நிறுத்தம்!
சாலையின் அடுத்த விளிம்பில்
சாரலில் முழுவதுமாய் நனைந்த
பெருமிதத்தோடு அவள்,
அவளை ரசித்ததை
உணர்ந்து விட்டால் போலும்
சட்டென்று பின்வாங்கியவள்
மழைநீர் வடிந்த விழிகளில்
மௌனமொழி பேசினாள். . .

முந்நூறு வினாடிகளே
நீடித்தன என்றபோதும்,
முந்நூறு நாட்கள் கடந்தும்
பசுமையான புரிதலை
நிரப்பிச் செல்கின்றது
அந்தப் பேருந்து நிறுத்தம் . . .

 

Wednesday, May 5, 2010

ஆழித் திருமகள் (கடல்)

பேரிரைச்சல் என்ற போதும்
பேரின்பம் தருபவள்.
தன் பரிணாமங்களினால்
நம்மை பரிணமித்துக் கொள்பவள்.
அவள் என்னை வருடிச் செல்ல
என்னையே இழந்து நிற்கிறேன் நான்.