Wednesday, February 13, 2013

காதலர் தின வாழ்த்துக்கள். . . !

காதல் எனும் ஆற்று வெள்ளம் தன்னில் நீந்தித்திளைத்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும், நீந்தத்துடிக்கும் உள்ளங்களுக்கும், காதல் நீரில் கால் நனைக்காமல் மணம் கொண்டவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். . . !

  





*** புரிந்ததும் புரியாததும் ***


நான் யாரென்று நீ அறிந்தும்,
நீ யாரென்று யாமறியாத போதும்,
குறுந்தகவலில் அனுப்பிய ரோசா(ரோஜா)
சொல்லிற்று என் மீதான உம் காதலை. . . !

உந்தன் அழகு முகம் தன்னைக்
எம் கண்கள் காணாத போதும்,
படபடத்த எந்தன் இருதயம்
சொல்லிற்று உன் மீதான எம் காதலை. . . !

உன் மூச்சுக் காற்று நானென்கிறாய்
நான் வடிக்கும் கவிதை நீயென்கிறேன்
மண் சேர்ந்த விழித் துளிகள்
சொல்லிற்று காதல் மீதான நம் காதலை. . . !


பி.கு: சட்டென்று மனதில் உதித்த வரிகள் மறு ஆய்வு செய்யக்கூட தோன்றவில்லை 

No comments:

Post a Comment