Tuesday, December 21, 2010

மழையின் விளைவு?

கட்டுரையின் மூலம்: புதிய தலைமுறை வார இதழ் (23 திசம்பர் 2010)
 
                            இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும், கிராமங்களும், நகரங்களும் திண்டாட்டத்தில் இருக்க, ஒரே ஒரு உயிரினம் மட்டும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது, அவைகள் தான் கொசுக்கள்.   கொசுக்கள் என்பது நகர வாழ்க்கையின் அடையாளம் என்ற நிலை மாறி, இன்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. அவைகளின் பெருக்கத்தை தடுப்பது உண்மையில் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய சவாலாகத் தான் உள்ளது. எனினும் கொசுக்களைப் பற்றி நான் அறிந்தனவற்றை பகிர்ந்து கொள்கின்றேன்.

உற்பத்தி கேந்திரங்கள்:
                       பொதுவாகக்  கொசுக்கள் 41  பிரிவுகளாக  3500 வகைகள் உள்ளன. இவைகளின் உற்பத்தி கேந்திரங்கள் தேங்கிய நீர்நிலை, பிளாஸ்டிக் தொட்டிகள், தேங்காய் குடுவை, குளிர்சாதனப்பெட்டி, பூந்தொட்டி மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாத நீர். முட்டையிட்ட பிறகு நீர் வறண்டு  போகினும் 15 நாட்கள்  வரை தாக்குபிடித்து இனவிருத்தி செய்யும் தன்மையுடையன கொசுக்கள்.

அதிக பாதிப்பை உண்டாக்குபவைகள்:

                       3500 வகைகளை கொசுக்கள் இருந்த போதிலும் அதிக பாதிப்பை உண்டாகுவது ஏடிஸ்(aedes) மற்றும் அனோபிலிஸ் வகைகள் தான். மேற்கூறிய இரண்டு வகைகளும் மேற்கொண்டு இரண்டு பிரிவுகளாய் உள்ளன. இதில் ஏடிஸ் வகை கொசுக்கள் உப்பு நீரிலும் தடையில்லாமல் இனவிருத்தி செய்து மனிதன் மற்றும் மிருகங்கள் என்ற வேறுபாடின்றி நோய்களைப் பரப்பும் தன்மையுடையவை .   மற்றவை  அனோபிலிஸ் வகைகள், இவைகள்  நல்ல நீரில் தங்கள் இனங்களை விருத்தி செய்து, மனித இனத்தை மட்டும் தாக்கக்கூடியவைகள்.

எவ்வாறு தற்காத்துக்கொள்வது?       

  •     வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர்த்தொட்டி, பூந்தொட்டி இவைகளை முறையாக பராமரிக்கலாம். 
  •     நீர் சேமிப்புக்கலங்களை மூடி வைத்தல் நலம். மாதமிருமுறை சேமிப்புக்கலங்களை சுத்தம் செய்யலாம்.  
  •     குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி நீர் தேங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  •     சாளரங்களுக்கு(windows) கொசுவலைகளைப் பொருத்தலாம். 
  •     நீண்ட நாட்களாய் நீர் தேங்கி இருக்கும் என்ற எண்ணமிருந்தால், கொசு அழிப்பான்களை தெளித்து விடலாம்.
        இனி என்ன நிம்மதியாய் கொசுக்களின் தொல்லையின்றி உறங்கலாம். . . வாழ்க வளமுடன்..... 

    No comments:

    Post a Comment